அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை கொண்டவர் . பல நற்பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் கொடைக்கானலில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீக்கு எதிரான விழிப்புணர்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்தி .
அதில் அவர் பேசியதாவது "கோடை வெயிலுக்கு இதமளிக்கிற இயற்கை தந்த கொடை கொடைக்கானல். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இது ஒரு கனவு பிரதேசம். வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் என பல உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன . இது நெருப்புகாலம் என்பதால் எளிதில் பற்றிக்கொள்ளும் நிலைமையில் காடு இருக்கிறது. சிறு தீப்பொறி பட்டால் போதும் காடோடு சேர்ந்து மரங்கள், பறவைகள் என அனைத்தும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிராக இந்த போரில் வனத்துறையினருடன் இணைந்திருப்போம் என்று கார்த்தி வீடியோவில் கூறியுள்ளார் .