ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாகவும், விஷால் நிறுவனம் ஒப்புக் கொண்டது.இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், அந்தப் படத்தை திரையிட்டதால் கிடைக்கும் வருவாயை, நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதிசெந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. லைகா நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இருப்பதை மனுதாரர் நிறுவனம் நிரூபித்துள்ளது. விஷால் நிறுவனம் தரப்பில், 15 கோடி ரூபாய் மட்டுமே கோபுரம்பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாகவும், 21.29 கோடி ரூபாய் கோருவதை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், 15 கோடி ரூபாய்க்கு பிக்சட் டிபாசிட்டை, தேசிய வங்கியில் செலுத்த, விஷால் நிறுவனத்துக்கு உத்தரவிடப்படுகிறது. அதன் ரசீதை, பதிவாளர் ஜெனரலிடம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும் 22ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.