சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகர் கார்த்திக்கின் மகனாக மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனாக மூன்றாம் தலைமுறை நடிகராக சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் கவுதம் கார்த்திக் கடந்த இரண்டாயிரத்து பதினெட்டில் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தனது பிறந்தநாள் அன்று பலரும் அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில் கவுதம் கார்த்திக் கூறிய வாழ்த்து மட்டும் சற்றே வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக மஞ்சிமா மோகனை அவர் மோமோ என குறிப்பிட்டு தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார். ‛இந்த வாழ்வில் இதுநாள் வரை நான் பெற்ற அதிலேயே பெருமைப்படக்கூடிய விஷயமாக ஒன்று இருந்தது என்றால் என்னுடைய வாழ்க்கையில் உன்னை போன்ற ஒருவர் இருப்பதுதான்' என்று கூறி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதன்மூலம் கவுதம் கார்த்திக் மஞ்சிமா உடனான தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் என்று சோசியல் மீடியாவில் பலரும் பேசிக் கொள்கின்றனர்.




