நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

நடிகர் கார்த்திக்கின் மகனாக மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனாக மூன்றாம் தலைமுறை நடிகராக சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் கவுதம் கார்த்திக் கடந்த இரண்டாயிரத்து பதினெட்டில் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தனது பிறந்தநாள் அன்று பலரும் அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில் கவுதம் கார்த்திக் கூறிய வாழ்த்து மட்டும் சற்றே வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக மஞ்சிமா மோகனை அவர் மோமோ என குறிப்பிட்டு தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார். ‛இந்த வாழ்வில் இதுநாள் வரை நான் பெற்ற அதிலேயே பெருமைப்படக்கூடிய விஷயமாக ஒன்று இருந்தது என்றால் என்னுடைய வாழ்க்கையில் உன்னை போன்ற ஒருவர் இருப்பதுதான்' என்று கூறி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதன்மூலம் கவுதம் கார்த்திக் மஞ்சிமா உடனான தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் என்று சோசியல் மீடியாவில் பலரும் பேசிக் கொள்கின்றனர்.




