'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் வரும், 20ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதுகுறித்து நடிகர் சங்க தேர்தல் அலுவலர் பத்மநாபன் அறிவிப்பு: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், 2019 ஜூன் 23ல் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை வரும், 20ம் தேதி காலை 8:00 மணிக்கு, கல்லுாரி சாலையில் உள்ள குட் செப்பர்ட் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும். தேர்தல் முடிவு, அடுத்து வரும் நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இந்த வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.