ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் வரும், 20ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதுகுறித்து நடிகர் சங்க தேர்தல் அலுவலர் பத்மநாபன் அறிவிப்பு: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், 2019 ஜூன் 23ல் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை வரும், 20ம் தேதி காலை 8:00 மணிக்கு, கல்லுாரி சாலையில் உள்ள குட் செப்பர்ட் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும். தேர்தல் முடிவு, அடுத்து வரும் நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இந்த வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.