ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடிகர்களாக ஜோடியாக அறிமுகமான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா தற்போது நிஜ வாழ்விலும் அழகான ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த தம்பதியருக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது அவருக்கு ஒன்பதாவது மாதம். எனினும், ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார்.
தற்போது ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் மார்ச் 24 ஆம் தேதி ஆல்யாவுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதி கொடுத்துள்ளனர். அதே மாதத்தில் 20 ஆம் தேதி அய்லா பாப்பாவுக்கு பிறந்த நாள். எனவே, அய்லா பாப்பாவின் பிறந்தநாளையும், ஆல்யாவின் ஒன்பதாவது மாத வளைகாப்பையும் ஒன்றாக கொண்டாட சஞ்சீவ் முடிவு எடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சஞ்சீவ் - ஆல்யாவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.