ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் |
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடிகர்களாக ஜோடியாக அறிமுகமான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா தற்போது நிஜ வாழ்விலும் அழகான ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த தம்பதியருக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது அவருக்கு ஒன்பதாவது மாதம். எனினும், ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார்.
தற்போது ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் மார்ச் 24 ஆம் தேதி ஆல்யாவுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதி கொடுத்துள்ளனர். அதே மாதத்தில் 20 ஆம் தேதி அய்லா பாப்பாவுக்கு பிறந்த நாள். எனவே, அய்லா பாப்பாவின் பிறந்தநாளையும், ஆல்யாவின் ஒன்பதாவது மாத வளைகாப்பையும் ஒன்றாக கொண்டாட சஞ்சீவ் முடிவு எடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சஞ்சீவ் - ஆல்யாவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.