டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, அதன் பிறகு கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்க உள்ள ஐஸ்வர்யா, அடுத்தபடியாக படங்கள் இயக்குவதற்காக தயாராகி வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சிம்புவும், தனுஷும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டவர்கள். இப்படியான நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சிம்புவை வைத்து தனது முதல் படத்தை ஐஸ்வர்யா இயக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி கோலிவுட்டில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.




