உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, அதன் பிறகு கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்க உள்ள ஐஸ்வர்யா, அடுத்தபடியாக படங்கள் இயக்குவதற்காக தயாராகி வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சிம்புவும், தனுஷும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டவர்கள். இப்படியான நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சிம்புவை வைத்து தனது முதல் படத்தை ஐஸ்வர்யா இயக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி கோலிவுட்டில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.