2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022' என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் உள்ள தி.நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இயற்கை விவசாயம் நீர்நிலை, பாரம்பரிய விதை மீட்பு, சந்தைப்படுத்துவது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா. எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு ஊட்டி விட்டதில்லை. தனியாளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார் என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதார். மேலும், பெண்கள்தான் விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்கிறார்கள். சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்த்ததில்லை. பெண்கள்தான் கடவுள் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் சிவகுமார்.