படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022' என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் உள்ள தி.நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இயற்கை விவசாயம் நீர்நிலை, பாரம்பரிய விதை மீட்பு, சந்தைப்படுத்துவது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா. எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு ஊட்டி விட்டதில்லை. தனியாளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார் என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதார். மேலும், பெண்கள்தான் விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்கிறார்கள். சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்த்ததில்லை. பெண்கள்தான் கடவுள் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் சிவகுமார்.