கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நடுநிசி நாய்கள், வெப்பம், நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே, யான் உள்ளபட பல படங்களை தயாரித்து உள்ளார். அமலாபால், அதர்வா நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கினார். எல்ரெட் குமார் சினிமா தயாரிப்புடன் கல்குவாரி உள்ளிட்ட வேறுபல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இவர் மீது வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து எல்ரெட் குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
எல்ரெட் குமாரின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வுக்கு பிறகுதான் அவர் எத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தெரியவரும், என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.