சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சென்னை : தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பைனான்சியர்கள், தொழிலதிபர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இரண்டு தினங்களுக்கு மேலாக நடந்த சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்ட என்ற விபரம் வெளியாகி உள்ளது.
அவற்றில் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய வீடு, அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.82 கோடி ரொக்க பணம், 8.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர போலியான ரசீதுகள் உருவாக்கி பொய் கணக்கு காண்பித்து ரூ.1000 கோடி வரி செய்து பலவற்றில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.