தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை. இதனை பலமுறை அவர் அறிவித்து விட்டார். தனது ரசிகர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதை அறிந்த அவர் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார். "அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை" என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.
என்றாலும் அவ்வப்போது அவர் அரசியலுக்கு வருவார் என்று யாராவது கிளப்பி விடுவார்கள். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், அரசியலுக்கு அஜித் வருவார். இதுகுறித்து அவர் அம்மாவுடன் பேசி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இது நேற்று வைரலாக பரவியது. இதை தொடர்ந்து அஜித்தின் செய்தி தொடர்பாளரும், மேலாளருமான சுரேஷ் சந்திரா கூறுகையில் "அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. எனவே ஊடகத்தினர் இதுபோன்ற தவறான தகவல்களை உக்குவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.