இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பாராத வகையில் வனிதா விஜயகுமார் வெளியேறினார். இதற்கு காரணமாக, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதால், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார். ஏற்கனவே வனிதாவுக்கும் ரம்யாவுக்கு ஆகாது என்பதால் தான் வனிதா வெளியேறிவிட்டார் என செய்திகள் உலா வந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா முதல் வேலையாக இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வனிதா கூறுகையில், 'நான் பிக்பாஸ் அல்டிமேட்டை விட்டு வெளியேறியதை ரம்யா கிருஷ்ணனுடன் இணைக்கும் முட்டாள்களுக்கு' என்று சிரிப்பு ஸ்மைலியை போட்டுள்ளார். அதன் பின், 'நான் சுயமரியாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நான் மன உளைச்சலுக்கு ஆளானதால் என்னால் குழப்பத்தை தாங்க முடியவில்லை. எனவே, துணிச்சலாக முடிவெடுத்து வெளியேறிவிட்டேன். என் சூழ்நிலையை புரிந்து கொண்டு என்னுடன் ஒத்துழைப்பு கொடுத்த எண்டெமால் மற்றும் டிஸ்னிக்கு என் மனப்பூர்வ நன்றி. வாழ்க்கை உங்களுக்கு வாய்ப்புகளை தருகிறது. உங்களுக்கு எது செட் ஆகுமோ அதை தேர்ந்தெடுங்கள். நான் எப்போதும் உறுதியான முடிவுகளை எடுப்பேன். அதை நினைத்து வருந்த மாட்டேன். ஏனெனில் எனக்கு என்ன வேண்டும், என் மதிப்பு என்ன என்பது எனக்கு தெரியும். எனவே, சில்லித்தனமான இந்த விளையாட்டுகளை குழந்தைகள் என்ஜாய் செய்யட்டும்' என அவர் பதிவிட்டுள்ளார்.