சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கதையின் தேவைக்கு ஏற்ப இயக்குனர் ஷங்கர் திறந்தவெளியில் சில முக்கிய காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார். இதன் காரணமாக படப்பிடிப்பை காண பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றதால் அந்த காட்சிகளை படம் பிடித்து வருபவர்கள் அதை ஆன்லைனில் பகிர்ந்து வருகிறார்கள். இது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதன் காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழுவினர் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் படக்காட்சி மற்றும் வீடியோக்களை டெலிட் செய்து வருகிறார்கள். அதோடு ஆர். சி - 15 படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட வேண்டாம் என்றும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த படத்தில் ராம்சரண் சிவில் சர்வீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.