அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சென்னை சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஏடிஜிபியுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் பணமோசடி செய்து விட்டதாக சூரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி என்பதால் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்த கொள்வதாகவும், அதனால் வழக்க சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் சூரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் "உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இதுபோன்ற மோசடி பிரச்னையில் சிக்க கூடாது. கோடி கணக்கில் மோசடி நடத்திருப்பதால், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும். அதனை துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஒருவர் கண்காணிக்க வேண்டும். விசாரணையை 6 மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது.