மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

5 முறை தேசிய விருது பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி. 1974 முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்: கோவிட் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனது நெருங்கி நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் பரிசோனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவுடன் அவர் தனது கணவர் ஜாவீத் அக்தருடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார் இதனை குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர் "எனது நண்பர் ஜாவீத்திடமிருந்து விலகி இருங்கள்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் ஷபானா ஆஸ்மி குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஷபானா ஆஸ்மி தற்போது ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங்குடன் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார்.