பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் சிம்புவின் நண்பரான மகத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிம்புவுக்கு நாளை துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. அதனால் தற்போது அவர் துபாய் சென்றிருப்பதோடு தனது பிறந்த நாளையும் அங்குதான் கொண்டாடப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டு உள்ளார். இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் துபாய் அரசின் இந்த கோல்டன் விசாவை இந்திய சினிமாவில் இருந்து மோகன்லால், மம்மூட்டி, சஞ்சய் தத், பார்த்திபன், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால், மீரா ஜாஸ்மின், உள்பட பலர் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.