மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் சிம்புவின் நண்பரான மகத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிம்புவுக்கு நாளை துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. அதனால் தற்போது அவர் துபாய் சென்றிருப்பதோடு தனது பிறந்த நாளையும் அங்குதான் கொண்டாடப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டு உள்ளார். இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் துபாய் அரசின் இந்த கோல்டன் விசாவை இந்திய சினிமாவில் இருந்து மோகன்லால், மம்மூட்டி, சஞ்சய் தத், பார்த்திபன், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால், மீரா ஜாஸ்மின், உள்பட பலர் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




