அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? |
வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் சிம்புவின் நண்பரான மகத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிம்புவுக்கு நாளை துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. அதனால் தற்போது அவர் துபாய் சென்றிருப்பதோடு தனது பிறந்த நாளையும் அங்குதான் கொண்டாடப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டு உள்ளார். இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் துபாய் அரசின் இந்த கோல்டன் விசாவை இந்திய சினிமாவில் இருந்து மோகன்லால், மம்மூட்டி, சஞ்சய் தத், பார்த்திபன், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால், மீரா ஜாஸ்மின், உள்பட பலர் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.