‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சென்னை: மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை போலீஸ் டி.ஜி.பி.,யை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் விஸ்வரூபம் படம் தொடர்பாக தமக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். இதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சினிமா துறையில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். வரும் 10ம் தேதி விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளேன். 11ம் தேதி தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வெளியாகும். இந்த படத்தை வெளியிட எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. மிரட்டல் விடுபவர்கள் யார் என புகார் மனுவில் கூறியுள்ளேன். அதனை இங்கு கூற விரும்பவில்லை. எனக்கு பாதுகாப்பு கேட்டும் மனு கொடுத்துள்ளேன். மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் . திட்டமிட்டபடி விஸ்வரூபம் படம் டி.டி.எச்-ல் வெளிவரும். மேலும் இதுதொடர்பாக தலைமைச்செயலாளரை சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளேன் என கூறினார்.