விஜய் ஆண்டனியின் அடுத்த எதிர்பார்ப்பு ‛சக்தி திருமகன்' | பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது |
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வீடியோ ஆல்பம் மூலமாக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். சமீபத்தில் இவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய் என்கிற திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு அவை பிடிக்காமல் கேட்கும்போதே தான் தூங்கி விட்டதாக கூறினார் அஸ்வின்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவரது பட வெளியீட்டையும் தள்ளி வைக்கும் அளவிற்கு நிலைமை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ள வார்த்தைகள் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
அவரது பதிவில் யார் என பெயர் குறிப்பிடாமல் "என்ன.. , பழிவாங்கறதா..? இல்லை.. நான் ரொம்பவே சோம்பேறி.. அதனால் நான் இங்கேயே தான் உட்கார்ந்திருக்க போகிறேன்.. கர்மா உன்னை.. " என மோசமான ஓரு ஆங்கில வார்த்தையை குறிப்பிட்டு அது என்னவென்று தெரியாதபடி அழித்தும் இருக்கிறார்.. யாரையோ பழிவாங்க விருப்பமில்லாமல் அதே சமயம் அந்த நபர் மீது கோபப்பட்டு இந்த பதிவை அவர் இட்டிருந்தாலும் இவ்வளவு மோசமான வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்க தேவையில்லை என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.