‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப் புதிய படம் தமிழில் அவர் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் பாணியில் ஆக்சன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக முதலில் செய்தி வெளியானபோது ஒரு பேட்டியில் அவர் அதை மறுத்து விட்டார்.
இந்தநிலையில் கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, ராசி கண்ணா போன்ற மூன்று நடிகைகளில் எந்த நடிகையை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனை தற்போது நடைபெற்று வருவதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிட அப்படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.