என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப் புதிய படம் தமிழில் அவர் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் பாணியில் ஆக்சன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக முதலில் செய்தி வெளியானபோது ஒரு பேட்டியில் அவர் அதை மறுத்து விட்டார்.
இந்தநிலையில் கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, ராசி கண்ணா போன்ற மூன்று நடிகைகளில் எந்த நடிகையை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனை தற்போது நடைபெற்று வருவதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிட அப்படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.