மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப் புதிய படம் தமிழில் அவர் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் பாணியில் ஆக்சன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக முதலில் செய்தி வெளியானபோது ஒரு பேட்டியில் அவர் அதை மறுத்து விட்டார்.
இந்தநிலையில் கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, ராசி கண்ணா போன்ற மூன்று நடிகைகளில் எந்த நடிகையை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனை தற்போது நடைபெற்று வருவதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிட அப்படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.