விஜய் தேவரகொண்டாவுக்காக டப்பிங் பேசிய தம்பி | லூசிபர் 2 ரிலீஸ் எப்போது? ; மோகன்லால் தகவல் | எம்ஜிஆர் - சிவாஜிக்கே செட்டாகாத போது எனக்கு மட்டும் எப்படி? ராமராஜன் கேள்வி | 'இந்தியன் 2' இசை விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்? | தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடி | அதிகாலை காட்சிகளை ரத்து செய்யும் தெலுங்கானா தியேட்டர்கள் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழு, இளையராஜாவை சந்திக்காத காரணம் இதுதானா? | சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா: நாளை தொடங்குகிறது | 15 லட்சம் பணமும் போச்சு, கேன்ஸ் பட விழா வாய்ப்பும் போச்சு: கிரண் வேதனை | வெப்ப வாதத்தால் பாதிப்பு: ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி |
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட சில படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த 2020ம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இது குறித்தான வழக்கை விசாரித்த திருவான்மியூர் போலீசார், விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் ஒருசிலர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தற்போது ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே பணமோசடி வழக்கு ஒன்றில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் ஹரிநாடாரை கைது செய்ய அனுமதி கோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திருவான்மியூர் போலீசார் கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.