ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட சில படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த 2020ம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இது குறித்தான வழக்கை விசாரித்த திருவான்மியூர் போலீசார், விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் ஒருசிலர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தற்போது ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே பணமோசடி வழக்கு ஒன்றில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் ஹரிநாடாரை கைது செய்ய அனுமதி கோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திருவான்மியூர் போலீசார் கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.