ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் இருப்பார்கள் என்பது சொல்வழக்கு. தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் படம் போடுகிறேன் என்று தயாரிப்பாளர்களிடம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிலகாலமாக ஓடிடி நிறுவனங்களுக்கு உங்கள் படத்தை நல்ல விலைக்கு விற்று தொகையை பெற்று தருகிறேன் என்று புது வழியை கண்டுபிடித்து அதில் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணத்தை இழந்த தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஏமாந்தது சின்ன தயாரிப்பாளர்கள் ஏமாற்றியது பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் நடவடிக்கைகளிலிருந்து எளிதில் தப்பி வருகின்றனர்.