விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் இருப்பார்கள் என்பது சொல்வழக்கு. தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் படம் போடுகிறேன் என்று தயாரிப்பாளர்களிடம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிலகாலமாக ஓடிடி நிறுவனங்களுக்கு உங்கள் படத்தை நல்ல விலைக்கு விற்று தொகையை பெற்று தருகிறேன் என்று புது வழியை கண்டுபிடித்து அதில் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணத்தை இழந்த தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஏமாந்தது சின்ன தயாரிப்பாளர்கள் ஏமாற்றியது பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் நடவடிக்கைகளிலிருந்து எளிதில் தப்பி வருகின்றனர்.