சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில், அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'அருந்ததி' தெலுங்குப் படம் வெளிவந்து நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தெலுங்கில் மட்டும் பெரிய வெற்றியைப் பெறாமல், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வசூலைப் பெற்றது.
இப்படத்தில் அனுஷ்காவின் இரு வேட நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது.. 'அருந்ததி, ஜெஜம்மா' என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அனுஷ்கா. மேலும், அனுஷ்காவிற்கு முன்னணி நடிகையாக தனித்துவமான வரவேற்பை இப்படம் பெற்றுத் தந்தது.
இப்படம் வெளிவந்து 13 ஆண்டுகள் முடிந்ததையடுத்து படம் பற்றி பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார் அனுஷ்கா. “ஜெஜம்மா, எந்த ஒரு நடிகைக்கும் வாழ்க்கையில் ஒரு முறைதான் இப்படியான கதாபாத்திரம் அமையும், நான் அதற்கு உண்மையாகவே கொடுத்து வைத்தவள். கோடி ராமகிருஷ்ணா சார், ஷியாம் பிரசாத் ரெட்டி, மற்றும் குழுவினருக்கு நன்றி. ரசிகர்களின் பெரிய அன்புக்கும், ஆதரவுக்கும் பெரிய நன்றி. இந்தப் படம் எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமான படம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனுஷ்கா நடித்து கடைசியாக 2020 அக்டோபரில் 'சைலன்ஸ்' படம் வெளிவந்தது. அதன்பின் எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்கவில்லை.