தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட் என மொழி தாண்டிய படைப்பாளிகளையும் கவர்ந்தவர். தற்போது முதன்முறையாக மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். கதை பிடித்துப்போனதால் இந்தப்படத்தை மம்முட்டியே தயாரிக்கவும் செய்துள்ளார்.
தற்போது இன்னொரு ஆச்சர்யமாக இந்தப்படம் வெளிவருவதற்குள்ளாகவே லிஜோ ஜோஸ் பள்ளிசேரியின் டைரக்சனில் அடுத்து ஒரு படத்திலும் நடிக்கிறார் மம்முட்டி. ஆனால் இது முழு நீள படமல்ல. பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பத்து சிறுகதைகளை மையப்படுத்தி பத்து படங்களின் தொகுப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்று தயாராகிறது. அதில் ஒரு கதையாக இவர்களது படமும் உருவாகிறது.