சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்கு, தமிழ்ப் படமான 'வாத்தி' படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அதன்பின்னர் படத்தின் படப்பிடிப்பும் அங்கு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இதனிடையே, படத்தின் கதாநாயகியான சம்யுக்தா மேனன் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக நேற்று செய்திகள் பரவின. ஆனால், அவர் படத்திலிருந்து விலகவில்லை எனவும், படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏன், இப்படியான செய்தி படம் ஆரம்பமான சில நாளிலியே வெளியாகிறது என தெலுங்குத் திரையுலகத்திலும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
சம்யுக்தா மேனன் தமிழில் இதற்கு முன்பு 'களரி, ஜுலை காற்றில்' ஆகிய படங்களில் நடித்தவர்தான். அப்போது அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன்பின் சில முக்கிய மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தெலுங்கில் பவன்கல்யாண், ராணா டகுபட்டி நடிக்கும் 'பீம்லா நாயக்' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.