நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் |

மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் திரைவாழ்க்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார், பத்து தல என சில படங்களில் நடிக்க வருகிறார் சிம்பு. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் ந டித்து வந்தபோது அப்பட நாயகி நிதி அகர்வாலுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் தற்போது அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவது போலவும் கோலிவுட்டில் ஒரு கிசுகிசு பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளை காதலித்த சிம்பு சில மாதங்களிலேயே அந்த காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில் மூன்றாவதாக நிதி அகர்வாலை காதலிப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. என்றாலும் சிம்புவின் இந்த காதலாவது கைக்கூடி கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று அவரது அபிமானிகள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.