'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் திரைவாழ்க்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார், பத்து தல என சில படங்களில் நடிக்க வருகிறார் சிம்பு. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் ந டித்து வந்தபோது அப்பட நாயகி நிதி அகர்வாலுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் தற்போது அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவது போலவும் கோலிவுட்டில் ஒரு கிசுகிசு பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளை காதலித்த சிம்பு சில மாதங்களிலேயே அந்த காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில் மூன்றாவதாக நிதி அகர்வாலை காதலிப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. என்றாலும் சிம்புவின் இந்த காதலாவது கைக்கூடி கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று அவரது அபிமானிகள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.




