மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்தியாவில் கொரோனா அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. திரையுலகினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சத்யராஜ், திரிஷா, மகேஷ்பாபு, தமன், லட்சுமி மஞ்சு, விஷ்ணு விஷால், ஸ்வரா பாஸ்கர் என எல்லா மொழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நடிகை ஷோபனா ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
தளபதி, இது நம்ம ஆளு உள்ளிட்ட தமிழில் ஏராளமான படங்களிலும், தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ள இவர் நடிப்போடு நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளார். நடன பள்ளியும் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதில் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உடல்வலி, குளிர் நடுக்கம் போன்றவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் இந்த வகை வைரஸில் இருந்து 85 பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்று இந்த ஒமைக்ரான் உடன் முடிவுக்கு வர வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.