மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பிரபல கானா பாடகியான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் கூட பிரபலமானார். இசைவாணியில் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை சதீஷ் என்ற கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இசைவாணி தற்போது முன்னாள் கணவர் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், 'சதீஷ் என்னுடைய பெயரில் போலி சமூக வலைத்தள கணக்கை தொடங்கி மோசடி செய்து வருகிறார். என் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியுள்ளார். இதை தட்டிக்கேட்டால், அப்படிதான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என தகாத வார்த்தைகளில் திட்டுவதோடு, நீ கச்சேரிக்கு செல்லும்போது உன் மீது ஆசிட் வீசுவேன். கொலை செய்வேன் என மிரட்டுகிறார்' என்று அதில் தெரிவித்துள்ளார்.