லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பொதுவாக தமிழகத்தில் பொங்கல் ரிலீஸ் என்பது தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் வெளியீட்டு கொண்டாட்டமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக பான் இந்திய ரிலீஸ் என்கிற பெயரில் மற்ற மொழிகளில் உருவாக்கப்பட்ட படங்களும் கூட இங்கே பண்டிகை தினங்களில் வெளியாகி கல்லா கட்ட துவங்கியுள்ளன. அந்தவகையில் ஆர்ஆர்ஆர்(ஜன., 7), ராதே ஷ்யாம் படம் இந்த பொங்கல் பண்டிகையில் ரிலீஸாவதாக இருந்தன.
ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கே அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்ஆர்ஆர் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியுள்ளன. ஏற்கனவே தமிழில் அஜித்தின் வலிமை மட்டுமே பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக இந்தப்படம் ஜன-26ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்ஆர்ஆர் படம் பின்வாங்கியதால் அவற்றுக்கான தியேட்டர்களில் பாதி, வலிமைக்கு சென்றாலும் மீதியுள்ள தியேட்டர்கள் கிடைத்தாலே அதை வைத்தே விஷாலின் வீரமே வாகை சூ(டிவி)டும். இப்படித்தான் தீபாவளியின்போது அண்ணாத்த படத்துடன் தனது எனிமி படத்தையும் துணிந்து ரிலீஸ் செய்தார் விஷால்.