என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாள திரையுலகில் வித்தியாசமான அதேசமயம் துணிச்சலான வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைக்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்வேதா மேனன். அவரது ரதி நிர்வேதம் படமாகட்டும், அல்லது தனது நிஜ பிரசவத்தையே படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும், நடிப்புக்காக வழக்கமான எல்லைக்கோடுகளை தாண்ட தயங்காதவர் ஸ்வேதா மேனன். கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்வேதா மேனன் தற்போது புத்தாண்டை முன்னிட்டு மவுனம் கலைத்துள்ளார்.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்கள் எல்லாவற்றையுமே மாற்றி விட்டன. நினைத்து பார்த்தால் மாநாடு படம் போலவே வாழ்க்கை மாறிவிட்டது. கொரோனா வந்தது.. லாக்டவுன் போட்டார்கள்.. ஓரளவு நிலைமை சரியானது.. ரிப்பீட்டு.. திரும்பவும் கொரோனா.. லாக்டவுன்.. மீண்டும் சரியானது.. இந்த புது வருடமாவது இந்த லூப்பில் இருந்து நம்மை காப்பாற்றும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்