'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மலையாள திரையுலகில் வித்தியாசமான அதேசமயம் துணிச்சலான வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைக்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்வேதா மேனன். அவரது ரதி நிர்வேதம் படமாகட்டும், அல்லது தனது நிஜ பிரசவத்தையே படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும், நடிப்புக்காக வழக்கமான எல்லைக்கோடுகளை தாண்ட தயங்காதவர் ஸ்வேதா மேனன். கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்வேதா மேனன் தற்போது புத்தாண்டை முன்னிட்டு மவுனம் கலைத்துள்ளார்.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்கள் எல்லாவற்றையுமே மாற்றி விட்டன. நினைத்து பார்த்தால் மாநாடு படம் போலவே வாழ்க்கை மாறிவிட்டது. கொரோனா வந்தது.. லாக்டவுன் போட்டார்கள்.. ஓரளவு நிலைமை சரியானது.. ரிப்பீட்டு.. திரும்பவும் கொரோனா.. லாக்டவுன்.. மீண்டும் சரியானது.. இந்த புது வருடமாவது இந்த லூப்பில் இருந்து நம்மை காப்பாற்றும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்




