தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் |

மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் விஷாலின் ‛ஆக்சன்', தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது பொன்னியின் செல்வன், கேப்டன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் 'அர்ச்சனா 31 நாட் அவுட்' என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஐஸ்வர்ய லட்சுமி. அறிமுக இயக்குனர் அகில் அனில்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியானது. வரும் பிப்-4ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. “முதன்முறையாக இந்தப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. எனது திரையுலக பயணத்தில் நிச்சயமாக இது ஒரு மைல்கல் தான். இன்னும் சொல்லப்படாத பெண்களின் கதைகள் நிறைய இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் என்னை தேடி வரும்போது அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.




