22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் விஷாலின் ‛ஆக்சன்', தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது பொன்னியின் செல்வன், கேப்டன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் 'அர்ச்சனா 31 நாட் அவுட்' என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஐஸ்வர்ய லட்சுமி. அறிமுக இயக்குனர் அகில் அனில்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியானது. வரும் பிப்-4ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. “முதன்முறையாக இந்தப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. எனது திரையுலக பயணத்தில் நிச்சயமாக இது ஒரு மைல்கல் தான். இன்னும் சொல்லப்படாத பெண்களின் கதைகள் நிறைய இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் என்னை தேடி வரும்போது அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.