நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் |

மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் விஷாலின் ‛ஆக்சன்', தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது பொன்னியின் செல்வன், கேப்டன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் 'அர்ச்சனா 31 நாட் அவுட்' என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஐஸ்வர்ய லட்சுமி. அறிமுக இயக்குனர் அகில் அனில்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியானது. வரும் பிப்-4ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. “முதன்முறையாக இந்தப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. எனது திரையுலக பயணத்தில் நிச்சயமாக இது ஒரு மைல்கல் தான். இன்னும் சொல்லப்படாத பெண்களின் கதைகள் நிறைய இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் என்னை தேடி வரும்போது அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.