ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! |

விஷால் நடித்த 'ஆக்ஷன்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து 'ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, பொன் ஒன்று கண்டேன், மாமன், தக் லைப்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக தற்போது ஐஸ்வர்ய லட்சுமி பதிவிட்டுள்ளார்.
‛‛சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது, எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அனுஷ்கா, சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுக்கிறேன் என நேற்று பதிவிட்டிருந்தார். ஆனால், ஐஸ்வர்ய லட்சுமி மொத்தமாக விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
இன்றைய யுகத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் அவர் எவ்வளவு காலம் விலகியிருப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.