300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நேரடி தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அளவிற்கு ஒரு டப்பிங் படத்தின் பாடல் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது. அது 'புஷ்பா' படத்தில் இடம் பெற்றுள்ள 'ஓ சொல்றியா மாமா' லிரிக் வீடியோ. யு டியூபில் வெளியான இரண்டு வாரங்களிலேயே 30 மில்லியன் பார்வைகளை அதாவது, 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்தப் பாடலை ரசிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
தெலுங்கில் 100 மில்லியன் பார்வைகளை இப்பாடல் நெருங்கி வருகிறது. இப்பாடல் குறித்து சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன், “இப்பாடல் மீது முதலில் சமந்தாவுக்கு நம்பிக்கையில்லை. நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவர் நடித்துக் கொடுத்தார். இப்போது பாடல் உலக அளவில் பெரிய ஹிட் ஆகிவிட்டது,” என்றார்.
அவரது பேச்சைக் குறிப்பிட்டு சமந்தா, “இனி எப்போதும் உங்களை நம்புவேன்,” என பதிலளித்துள்ளார். சமந்தாவின் பதிவிற்கு ஹார்ட்டின் எமோஜி பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.