ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் இந்தியாவின் சிறப்பு, பன்முக தன்மை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை தேசிய விருது பெற்ற தமிழ் படமான மறுபக்கம் என்எப்டிசி தயாரித்த படம். இதன் இயக்குனர் சேதுமாதவன் சமீபத்தில் மரணம் அடைந்தார். அதேபோல மகேந்திரன் இயக்கிய சாசனம், பொன்வண்ணன் இயக்கிய நதி கரையினிலே உள்ளிட்ட படங்கள் என்எப்டிசி தயாரித்த படங்கள்.
தற்போது என்எப்டிசி படம் தயாரிப்பில் முனைப்பு காட்டத் தொடங்கி உள்ளது இந்திய மொழிகளில் இந்தியாவின் பன்முக தன்மை, சிறப்பை அடிப்படையாக கொண்ட கதைகள் இருந்தால் அதனை இயக்குனர்கள் வருகிற ஜனவரி 31ம் தேதிக்குள் அந்த கதையை என்எப்டிசிக்கு கொடுக்கலாம்.
இதற்கான விண்ணப்பத்தை என்எப்டிசி தளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தங்களிடம் உள்ள கதையை பதிவேற்றம் செய்யலாம். இதற்கென நியமிக்கப்படும் நடுவர் குழு கதையை தேர்வு செய்து தயாரிக்கும். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அறிமுக இயக்குனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.