கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
இந்தியத் திரையுலகின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. தமிழில், “அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன்' உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
பாவலர் கிரியேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து 30 ஆண்டு காலம் ஆகிவிட்டது. சமீப காலமாக இளையராஜாவும், ரஜினிகாந்தும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம், தனது நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டதாகவும் அதற்கு ரஜினி சம்மதம் சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டு பாலிவுட் இயக்குனரான பால்கி, ரஜினியை சந்தித்து கதையைக் கூறியதாகவும், அந்தக் கதையும் ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கலாமா, தமிழில் தயாரிக்கலாமா என்று பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் அது பற்றி முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.