தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்தியத் திரையுலகின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. தமிழில், “அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன்' உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
பாவலர் கிரியேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து 30 ஆண்டு காலம் ஆகிவிட்டது. சமீப காலமாக இளையராஜாவும், ரஜினிகாந்தும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம், தனது நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டதாகவும் அதற்கு ரஜினி சம்மதம் சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டு பாலிவுட் இயக்குனரான பால்கி, ரஜினியை சந்தித்து கதையைக் கூறியதாகவும், அந்தக் கதையும் ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கலாமா, தமிழில் தயாரிக்கலாமா என்று பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் அது பற்றி முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.