'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்த படம் ‛அட்ரங்கிரே'. இவருடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஓடிடியில் இந்த படம் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்தின் புரமோஷன் சம்பந்தமாக கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலிகான் கலந்து கொண்டனர்.
அப்போது கரண் ஜோகர், தனுஷிடத்தில் ஒருநாள் நீங்கள் ரஜினியாக கண்விழித்தால் என்ன செய்வீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு தனுஷ், பெரிதாக எந்த பில்டப்பும் செய்யாமல் ரஜினி சாரை போலவே நடந்து கொள்வேன் என்று பதில் அளித்தார். அதையடுத்து தனுஷ் இடத்தில் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு அதிக இடைவெளி கொடுப்பது ஏன்? என்று அவர் கேட்ட போது, தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதினால் தான் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடிக்க முடியவில்லை. அதோடு நல்ல கதையும் நேரம் கிடைக்கும் போதும் ஹிந்தி பட வாய்ப்புகளை நான் தவற விடுவதில்லை என்றார்.