என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமா நட்சத்திரமான நகுல் தற்போது சின்னத்திரையில் பல போட்டி மேடைகளில் நடுவராக அலங்கரித்து வருகிறார். இவருக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. சமூக கருத்துடன் பேசும் ஸ்ருதிக்கும் தற்போது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதேபோல் சர்ச்சையாக பேசும் சில நெட்டீசன்களுக்கும் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து அடிக்கடி சூடு கொடுத்து அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நகுல் தனது மனைவி மற்றும் மகள் அகிராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'அழகிய தேவதைகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில் நெட்டிசன் ஒருவர் உங்கள் மனைவி திருநங்கை போல இருக்கிறார் என மோசமாக விமர்சித்துள்ளார். இதனால் கடுப்பான நகுல், அந்த நெட்டிசனை கமெண்டிலேயே லெப்ட் ரைட் வாங்கிவிட்டார். அதில் அவர், 'நீ யாரு என்ன ப்ரோன்னு கூப்பிடுறதுக்கு? உனக்கும் எனக்கும் காமனா என்ன இருக்கு? நீ பேசினத்துக்கு கண்டிப்பா கஷ்டப்படுவ. இந்த மாதிரி பேசுறவங்க லைப்ல எதுவுமே சாதிக்காம் அடுத்தவங்கள குறை சொல்ற சீப்பான கேரக்டரா தான் இருக்க முடியும்' என விமர்சித்து பதில் கமெண்ட் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த நெட்டிசன் நகுலின் பதிவிலிருந்து எஸ்கேப் ஆகி சென்றுவிட்டார். தேவையா இதெல்லாம் அவருக்கு?