டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி டிசம்பர் 17ம் தேதி வெளியான படம் 'புஷ்பா'.
இப்படம் முதல் நாளில் 71 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்றைய வசூலுடன் சேர்த்து இரண்டே நாளில் 116 கோடி வசூலித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் தவிர்த்து ஆந்திரா, தெலங்கானாவில் ஒரு தெலுங்குப் படத்தின் இரண்டாவது நாள் வசூலில் 'புஷ்பா' சாதனை படைத்துள்ளது. நேற்று மட்டும் இப்படம் அந்த இரண்டு மாநிலங்களிலும் சுமார் 14 கோடி வசூலித்துள்ளதாம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூல் முதல் நாள் வசூல் அளவிற்கு இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அடுத்த சில தினங்களில் இப்படம் 150 கோடி வசூலைக் கடந்தால் படம் லாபக் கணக்கில் சென்றுவிடும் என்கிறார்கள்.
ஆந்திராவில் இப்படத்தின் டிக்கெட்டுகள் அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்கப்படாத காரணத்தால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் வசூல் தொகை இன்னும் அதிகமாகியிருக்கும்.
அல்லு அர்ஜுன் எதிர்பார்த்தபடியே இந்தப் படம் அவருக்கு தமிழிலும், ஹிந்தியிலும் புது வியாபாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.