மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
பிரமாண்டமான படங்களை எடுப்பது போலவே புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரமாண்டம் காட்டும் பணியையும் செய்து வருகிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமவுலி. தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கனை வைத்து அவர் இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் படக்குழுவினருடன் சுற்றிய ராஜமவுலி இந்தப்படத்தின் ஹிந்தி வெளியீட்டிற்கான மாபெரும் புரமோஷன் நிகழ்ச்சியை மும்பையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரமாண்டம் காட்ட தீர்மானித்துள்ள ராஜமவுலி, ஐதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 3000 ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ரசிகர்கள். இந்த மாபெரும் கூட்டத்தை கூட்டுவதன் மூலம் பாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் படத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்கான ராஜமவுலியின் மாஸ்டர் பிளான் இது என்று சொல்கிறார்கள்.