ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த நவ., 25ல் திரைக்கு வந்த படம் ‛மாநாடு'. பல தடைகளை கடந்து இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகும் முதல்நாள் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்னையால் படம் வெளியாகவில்லை என தயாரிப்பாளர் அறிவித்தார். பின்னர் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் படம் சொன்ன தேதியில் வெளியானது. படமும் தற்போது நல்ல வசூலை தந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பாக சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு : மாநாடு படம் வெளியாக வேண்டிய சமயத்தில் பைனான்சியர் உத்தம் சந்த்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரூ.5 கோடி தர வேண்டியிருந்தது. படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர். இதனால் சுரேஷ்காமாட்சி, உத்தம் சந்த் மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து உத்தம் சந்த், சுரேஷ் காமாட்சி இருவரும் உரிய விளக்கம் அளிக்குமாறு வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை டிச.,16க்கு தள்ளி வைத்தார்.




