விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த நவ., 25ல் திரைக்கு வந்த படம் ‛மாநாடு'. பல தடைகளை கடந்து இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகும் முதல்நாள் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்னையால் படம் வெளியாகவில்லை என தயாரிப்பாளர் அறிவித்தார். பின்னர் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் படம் சொன்ன தேதியில் வெளியானது. படமும் தற்போது நல்ல வசூலை தந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பாக சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு : மாநாடு படம் வெளியாக வேண்டிய சமயத்தில் பைனான்சியர் உத்தம் சந்த்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரூ.5 கோடி தர வேண்டியிருந்தது. படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர். இதனால் சுரேஷ்காமாட்சி, உத்தம் சந்த் மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து உத்தம் சந்த், சுரேஷ் காமாட்சி இருவரும் உரிய விளக்கம் அளிக்குமாறு வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை டிச.,16க்கு தள்ளி வைத்தார்.