கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த நவ., 25ல் திரைக்கு வந்த படம் ‛மாநாடு'. பல தடைகளை கடந்து இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகும் முதல்நாள் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்னையால் படம் வெளியாகவில்லை என தயாரிப்பாளர் அறிவித்தார். பின்னர் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் படம் சொன்ன தேதியில் வெளியானது. படமும் தற்போது நல்ல வசூலை தந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் தொடர்பாக சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு : மாநாடு படம் வெளியாக வேண்டிய சமயத்தில் பைனான்சியர் உத்தம் சந்த்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரூ.5 கோடி தர வேண்டியிருந்தது. படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர். இதனால் சுரேஷ்காமாட்சி, உத்தம் சந்த் மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து உத்தம் சந்த், சுரேஷ் காமாட்சி இருவரும் உரிய விளக்கம் அளிக்குமாறு வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை டிச.,16க்கு தள்ளி வைத்தார்.