மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு |

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த உற்சாகத்தோடு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் சிம்பு திடீரென சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று(டிச., 11) அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்தது. தொடர்ந்து ஓரிரு நாள் மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.
சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே அவரது ரசிகர்கள், சீக்கிரம் அவர் குணமாகி வர வேண்டும் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.