புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்றவர் நடிகர் அஷ்வின்.. சமீபகாலமாக தனி வீடியோ ஆல்பங்களிலும் நடித்து தனது ரசிகர் வட்டத்தை அதிகமாக்கி கொண்டார். சொல்லப்போனால் குக் வித் கோமாளி சிவாங்கி மூலமாக இன்னும் பிரபலமானார் என்றே சொல்லலாம். இந்தநிலையில் என்ன சொல்ல போகிறாய் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இவர் அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சற்று அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதன் மூலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த விழாவில் பேசும்போது, “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. என்னிடம் கத்தை சொல்லும்போது எனக்கு அது பிடிக்காவிட்டால் தூங்கி விடுவேன்.. அதுபோல நாற்பது முறை தூங்கியுள்ளேன். நாற்பத்தி ஒன்னாவது கதையான இதுதான் என்னை ஈர்த்தது என கூறினார். அவரது இந்த பேச்சு உதவி இயக்குனர்கள் மற்றும் சில சீனியர் இயக்குனர்களிடம் கூட கோபத்தை வரவழைத்தது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை, அப்படியே விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார். அவர் கூறுகையில், “சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக... அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்” என கூறியுள்ளார்.