மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கில் சீனியர் நடிகர்களில், இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக அதிரடி ஹீரோவாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் இவர் நடித்த அகண்டா திரைப்படம் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனியாக துவங்கியுள்ள ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் பாலகிருஷ்ணா.
சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில் நடிகர்கள் நானி மற்றும் மோகன்பாபு ஆகியோர் கலந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார்கள். இந்தநிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இந்த மாலை பொழுதை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன் என மகேஷ்பாபு கூறியுள்ளார். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்பொது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சி மூலம் மகேஷ்பாபு பற்றி இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.




