‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாகாந்தி என்பவர், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த நவம்பர் 2-ந்தேதி அன்று இரவு நடிகர் விஜய்சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை சொல்லி பாராட்டினேன். ஆனால் அந்த வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய்சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவாக பேசினார். எனது சாதியை தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது அவரது மேலாளர் ஜான்சன் என்னை தாக்கினார். அப்போது எனது காதில் அறைந்தார். இதனால் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தநாள், விஜய்சேதுபதியை நான் தாக்கியது போன்று அவர் தரப்பில் அவதூறு செய்தி பரப்பினார்கள்.
எனவே சினிமாத்துறையில் இருக்கும் ஒரு நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கியதோடு அவதூறு பரப்பிய குற்றத்திற்காக விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இந்த வாரமே நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.