தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நெட்டிசன்களால் வைரல் செய்யப்பட்டு பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் செலிபிரேட்டி அந்தஸ்தை பெற்றார். அதனை தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் அவர் சென்னை அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'அமைந்தகரையில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வரும் மனிஷும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்து இருவரும் பழகி வந்தோம். அந்த நாட்களில் என்னிடமிருந்து இருச்சக்கர வாகனம், 2 பவுன் சங்கிலி என இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேலாக வாங்கி கொண்டார். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். மேலும் தொடர்ந்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். என்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றியதுடன் பண மோசடியும் செய்த மனிஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் கொடுத்துள்ளார்.