அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அந்தவகையில் கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்குவதற்கு சற்று முன்னதாக வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் தயாராகி வரும் தமிழரசன் உள்பட நான்கு படங்களில் நடித்துள்ளார் சுரேஷ்கோபி..
கொரோனா இரண்டாவது அலை முடிந்து கேரளாவிலும் இயல்புநிலை துவங்கிய நிலையில் அவர் நடித்துள்ள காவல் என்கிற படம் வரும் நவ-25ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் படங்கள் மூலம் சுரேஷ் கோபியின் இமேஜை தூக்கி நிறுத்திய கதாசிரியரும், நடிகருமான ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய மம்முட்டி நடித்த கசபா என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.