இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழில் 'இந்தியன் 2' படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடந்து, அடுத்த கட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை, சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை மட்டும் சுமார் 350 கோடி கொடுத்து அந்நிறுவனம் வாங்கிவிட்டார்களாம். ரீமேக் உரிமைகள், இசை உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மட்டும் தயாரிப்பாளர் அவரது வசம் வைத்துள்ளாராம்.
படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றால் கூட 350 கோடிக்கு விற்கப்பட்டால் தயாரிப்பாளருக்கு இப்போதே 50 கோடி லாபம் கிடைத்துவிடும். மேலும் இன்னும் விற்கப்படாத உரிமைகளான வெளிநாட்டு, இசை, ரீமேக் உரிமை ஆகியவற்றை விற்றால் அதுவே 100 கோடி வரை போகும்.
பான்-இந்தியா படங்களை பாலிவுட்டில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன. இதனால், இந்த விலைக்குப் போகவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.