அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளவம் வாங்கும் நடிகை நயன்தாரா தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 5 கோடி வரை சம்பளமாக வாங்குவதாகச் சொல்கிறார்கள். மற்ற முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட இது இரு மடங்கு அதிகமும் என்பது கூடுதல் தகவல். தெலுங்கில் நயன்தாரா தற்போது சிரஞ்சீவி நடிக்கும் 'காட்பாதர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நயன்தாராவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள 'லூசிபர்' படத்தின் ரீமேக் தான் இந்த 'காட்பாதர்'. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். படம் முழுவதும் இடம் பெறாத குறைவான காட்சிகள் கொண்ட கதாபாத்திரம்தான். இருந்தாலும் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என சிரஞ்சீவி சொன்னதாக டோலிவுட்டில் தகவல் உண்டு. அதனால்தான் இவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறார்களாம்.
தெலுங்கில் ஒரு படத்திற்காக ஒரு கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச சம்பளம் இது என்கிறார்கள்.