படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
சென்னை : ''யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் நான் புகார் கூறியது இல்லை. சொல்ல வேண்டும் என்றால், நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு அது பிடிக்காது. என் பிரச்னை நிச்சயம் முடிவுக்கு வரும். அதை நானே பார்த்துக் கொள்வேன்,'' என சிலம்பரசன் கூறினார்.
நடிகர் சிலம்பரசன் நேற்று அளித்த பேட்டி: மாநாடு படம், 'டைம் லுாப்'பில் அரசியலை கலந்து உருவாக்கியுள்ள படம். இது முற்றிலும் அரசியல் படம் இல்லை. பின்னணியில் மட்டுமே அரசியல் கொஞ்சம் இருக்கும். மாநாடு இசை வெளியீட்டு விழாவில், முதலில் சிரிச்சுட்டு தான் இருந்தேன். இதற்கு முன் 'வாலு' படத்திலேயே எனக்கு நிறைய பிரச்னை வந்தது.
அதையெல்லாம் கடந்து வந்துள்ளேன். ஆனால், இந்த 'மாநாடு' படம் ரொம்ப உணர்ச்சிகரமான படமாகி விட்டது. பல முறை நின்று போய், ஆரம்பமானது. இடையில் கொரோனா, உடல் இளைப்பு என பல பிரச்னை ஏற்பட்டது. உள்ளுக்குள் இருந்த வலியால் தான் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன்.
என் திருமணம் நடக்கும் போது நடக்கும். அதுவரை என் வேலையை நான் செய்கிறேன். நான் உடல் எடையை குறைக்கும் போது, சின்ன இடைவேளை விட்டால் மீண்டும் உடல் எடை கூடிவிடுகிறது. இதில் இருந்து முற்றிலும் வெளியே வருவது கடினமாக இருந்தது. கொரோனா காலத்தில், இரண்டு மாதம் திட உணவை முற்றிலும் தவிர்த்து விட்டேன். அதுபோக உடற்பயிற்சியிலும் ஈடுபட்டேன். 27 கிலோ குறைந்துள்ளேன். இந்த திடீர் மாறுபாட்டை, நம் உடலின் அஜிரண சக்தி அதை ஏற்றுக் கொள்வது கடினம் ஏற்றுக் கொண்ட பின் சுலபமாகிவிடும்.
என்னால் முடிந்த அளவுக்கு நான் சக கலைஞர்களை தட்டிக் கொடுத்து வருகிறேன். என் 50வது படம் வரை படங்களில் மட்டுமே கவனம் இருக்கும். இப்போது 47 வது படம் போய் கொண்டிருக்கிறது. நிறைய படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும். அதற்கான கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறேன். தயாரிப்பாளர் தரப்பில் என் மீது கூறப்படும் பிரச்னையை பொறுத்தவரை, யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் நான் புகார் கூறியது இல்லை.
சொல்ல வேண்டும் என்றால், நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கு அது பிடிக்காது. என் பிரச்னை நிச்சயம் முடிவுக்கு வரும். அதை நானே பார்த்துக் கொள்வேன். பிரச்னை என்றால் மட்டுமே அதுப்பற்றி நான் பேசுவேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தது இல்லை.
என்னை ஆளாக்கிய ரசிகர்களை அரசியலை தவிர்த்து வேறு விதமாக அழைத்துச் செல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது, அதற்காக சில வேலைகளை செய்து வருகிறேன். அதைப்பற்றி விரைவில் தெரிவிப்பேன். சினிமா தற்போது மாறி வருகிறது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டும். வித்தியாசமான கதைகளை தர வேண்டும். இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.