டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். தமன் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், அடுத்து குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார். கதைப்படி விஜய் எல்லோரிடமும் அதீத அன்பு வைத்து விடுவாராம். இதனால் எழுகின்ற சிக்கல்கள் தான் கதை என்கிறார்கள். இதுவரை அதிகம் பேசாமல் அமைதியான கேரக்டர்களிலேயே நடித்து வந்த விஜய் இந்த படத்தில் கலகலவென பேசும் கேரக்டரில் நடிக்கிறாராம். விஜய் ஆரம்பகால படங்களில் கலகலப்பான கேரக்டர்களில் தான் நடித்து வந்தார்.