ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சூர்யா மற்றும் பாண்டியராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. இன்று படத்தின் அப்டேட் வெளியாகும் என அறவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி படம் பிப்ரவரி 4ல் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் சிம்புவுக்கு பிப்ரவரி 3 பிறந்தநாள். அதற்கு மறுநாள் சூர்யா படம் வெளியாக உள்ளது.
முன்னதாக இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட எண்ணியிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் வெளியாக உள்ளதால் பிப்ரவரிக்கு இந்த படத்தை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.