ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தமிழில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் ஒரு நடிகராக அறிமுகமாகி பின் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன்.. அதேசமயம் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜெகதீஷ் படத்தில் முதலில் பின்னணி இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தமன் திடீரென அந்தப்படத்தில் இருந்து வெளியேறினார்.. பின்னர் அவருக்கு பதிலாக மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான கோபிசுந்தர் அந்தப்படத்திற்கு பின்னணி இசையமைத்தார்.
தான் விலகியதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தமன். அந்தப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்த தமன், பின்னணி இசை வேலையையும் முழுதாக முடித்து கொடுத்து விட்டாராம். ஆனால் நானிக்கு அவர் உருவாக்கிய பின்னணி இசை பிடிக்கவில்லை. அதனால் தான் அந்தப்படத்தில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ள தமன், “எனது சினிமா பயணத்தில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை. எல்லா படங்களுக்கும் இசையமைப்பது போன்று முழு அர்ப்பணிப்புடன் தான் இசையமைத்தேன்.. எந்த இடத்தில் அவர்களுக்கு தவறாக மாறிப்போனது என தெரியவில்லை” என கூறியுள்ளார்.