தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
தமிழில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் ஒரு நடிகராக அறிமுகமாகி பின் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன்.. அதேசமயம் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான டக் ஜெகதீஷ் படத்தில் முதலில் பின்னணி இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட தமன் திடீரென அந்தப்படத்தில் இருந்து வெளியேறினார்.. பின்னர் அவருக்கு பதிலாக மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான கோபிசுந்தர் அந்தப்படத்திற்கு பின்னணி இசையமைத்தார்.
தான் விலகியதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தமன். அந்தப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்த தமன், பின்னணி இசை வேலையையும் முழுதாக முடித்து கொடுத்து விட்டாராம். ஆனால் நானிக்கு அவர் உருவாக்கிய பின்னணி இசை பிடிக்கவில்லை. அதனால் தான் அந்தப்படத்தில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ள தமன், “எனது சினிமா பயணத்தில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை. எல்லா படங்களுக்கும் இசையமைப்பது போன்று முழு அர்ப்பணிப்புடன் தான் இசையமைத்தேன்.. எந்த இடத்தில் அவர்களுக்கு தவறாக மாறிப்போனது என தெரியவில்லை” என கூறியுள்ளார்.